துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்
வேதனையின் விளிம்புகளை,விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....
புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.
இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும்
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்
வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.
விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்
அழுது ஆண்டுகள் ஆச்சு.
விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்
கனவுகள் கண்டவன்
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.
தோல்விகள் என்னை காதலித்ததால்
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.
விடியும் திசையில் தான் என் பயணம்- விரைவில்
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.
வெடிக்கும் கனலாய் கருகுது மனது
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்
இருக்கும் "முடிப்பேன்" எனும் நெருப்பு.