ரமணா சபா  (502 views)

 

What is ரமணா doing now?

அன்பு உறவுகளே
19 days ago  ·  Comment »

Location

வடமராச்சி கிழக்கு, Australia

Birthday

March 27
 
Advertisement

Info

http://podiyan.hi5.com - Send it to your friends

Birthday

March 27

Location

வடமராச்சி கிழக்கு, Australia

Languages

English
 

About Me

click to comment

வணக்கம்

உலகம் எல்லாம் பரந்து வாழும் என் இனிய தமிழ் உறவுகளே....
இணயத்தின் மூலம் உங்களை இனிய பொழுதில் சந்திக்கிறேன்.
"தூரங்களால்" துளித்துளியாய் சிதறிக்கிடக்கிறோம்.
"தமிழன்" என்ற சொல் எங்களை ஒன்றுசேர்திடும்.
ஒரு குடையின் கீழ் ஒன்று படுவோம்.
ஒரே நோக்கோடு ஒற்றுமையாய் "குரல்" கொடுப்போம்".

அன்புடன்
"தமிழ்ப்பொடியன்"

தமிழ்ப்பொடியன் உறவுகள் கருகுதையோ...!!! உலகமே திரும்பிபாரடா....!!! அட கடவுளே...! என் உறவுகள் சுமக்கும் 'வலி" சொல்ல என்னிடம் வார்த்தைகளும் இல்லை, வழியும் இல்லையே..! என் தாய்மண் கண்முன்னே கயவர்களால் கற்பழிக்கப்படும்போது... என் நெஞ்சு பிழந்து குருதி கசிந்து உணர்வுகள் ஓலமிடுகிறது. என் உடன்பிறப்புக்கள் உயிர்பிழிந்து உடல் மெலிந்து வானம் கிழிய "காப்பாற்றுங்கோ" என அவலக்குரல் எழுப்ப... என் குருதி கொதித்து விழியில் நீர் கசிந்து ஓடிவந்து உங்களின் கைபிடிக்க துடிக்குது என் கரங்கள். ஆனாலும் இயலாமையின் விழிம்பிலும்....! சுயநலத்தின் போர்வையாலும்....! காலத்தின் தீர்ப்புகளாலும்....! கட்டாய புலப்பெயர்வாலும்....! என் கைகள் கட்டப்பட்டு வாய்மூடி வாழாது 'சும்மா' இருக்கிறேன். 'தாய்' அழும்போது துடைத்துவிடும் தூரத்தில் என் கைகள் இல்லையே...! உறவுகள் கலங்கி துணை தேடும் போது தோள் கொடுக்க எனக்கு 'நாதி' இல்லையே...! இதை நினைக்கையிலே வெட்கிதலைகுனிந்து விம்மி அழுகுதடா நெஞ்சு...! உறவுகள் கருகுதையோ...!!! உலகமே திரும்பிப்பாரடா....!!! சின்னத்தங்கச்சி 'பெரியவளாகி' "குட்டிஅண்ணா வருவியா?"என்றவளுக்கு "கெதியில வருவன்" என்று பிஞ்சு மனத்தில் பொய் சொன்னவன் ஆசையாய் வளத்த அம்மாச்சிக்கு 'பந்தம்' பிடிக்கக்கூட இந்த பேரனுக்கு பாக்கியம் இல்லை. என்னைப்பெற்ற அம்மா ஆருமற்ற அனாதையாக ஆசுப்பத்திரியில் படுத்திருந்து "தம்பி எப்படா பாக்கபோறன்"எனும்போது சொல்ல 'பதில்' இல்லாதுஏங்கி நின்றவன். இப்போதும் மட்டும் என்ன உணர்வு துடிக்கிறதோ? உள்ளம் கலங்குதோ? உணர்வு 'பொங்கி' புளியங்குளம் கடக்கவா போகிறேன்...??? இல்லவே இல்லை. ஆனாலும்...... எனக்குள் இருக்கும் 'மனச்சாட்சி' குத்துகிறது. தமிழ்பொடியன் என்ற 'தன்மானம்" தவிக்கிது. 'இனவிடுதலை' என்ற 'தாகம்' குருதியில் சுண்டி இழுக்குது. 'மனிதாபிமானம்' என் மனதை குடைகிறது. என் சனத்துக்காக எவனெவனோ 'நீலிக்கண்ணீர்' வடிக்க நான் மட்டும் விழியிருந்தும் விசரனாகவா வாழ முடியும்? எவனோ வருவான் எமக்கு 'விடிவு' தருவான் என என் இனம் என் சனம் ஏங்கி வாழவில்லை. கப்பலில் உணவு வருமென காத்துக்கிடக்கவும் இல்லை. என் தங்கச்சியின் பாவாடை கிழிந்து கிடந்தால் எனக்குத்தான் 'வெட்கம்' என் தாயின் சேலையில் பொத்தல் இருந்தால் எனக்குத்தான் 'அவமானம்' என் அப்புவின் கோவணம் களவுபோனால் நான்தான் பொறுப்பு. என் தம்பி பட்டினியால் அழுதால் அடுப்பினில் 'உலை' வைக்கவேண்டியதும் நான்தான். இதற்காக பக்கத்து வீட்டுக்காரனையா அழுது கூப்பிடமுடியும்? வேணுமெண்டால் எனக்காக 'ஐயோ பாவம்' என கவலைபட மட்டுமே இயலும். அது இருக்க... உறவுகள் கருகுதையோ...!!! உலகமே திரும்பிப்பாரடா....!!! பாரததேசத்தை நாங்கள் பாசத்தோடுதான் பல காலமாக பார்க்கிறோம். எமக்கான 'ஆறுதல் கரங்களும் சுமைதாங்கிகளும்' அங்கே 'ஆயிரம்' உண்டு. யார் செத்தாலும் எவன் ஆண்டாலும் உறுதியோடு 'கொள்கை சாயாத' கோபுரங்களும் சில உண்டு. இருந்தாலும்... பதவிக்கும் பகட்டுக்கும் 'முதலை கண்ணீர்' வடிப்பவரும் உண்டு. 'எல்லாம்' முடிந்ததும் 'சுயரூபம்' காட்டுபவரும் உண்டு. எதுவாயினும்.... நாம் எப்போதும் பாரதமாதாவை எங்கள் 'பெரியம்மாவாகவே' நினைக்கிறோம். எங்கள் வீட்டில் சாவீடோ? கல்யாணவீடோ? கட்டாயம் ஒரு அழைப்பு அவர்களுக்கு எப்போதும் உண்டு. அது இருக்க... உறவுகள் கருகுதையோ...!!! உலகமே திரும்பிப்பாரடா....!!! வான்வழி வரும் 'வல்லூறு' எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சு பிழந்து நெருப்பெறிந்து போகிறான். கர்ப்பிணிப்பெண்களின் கருக்கலைத்து சிசுக்களின் சின்ன உயிர் தின்கிறான். பள்ளி செல்லும் வெள்ளைச்சிட்டுக்களை செங்குருதியில் குளிக்க வைக்கிறான். செருக்கோடும் சீரும் சிறப்போடும் பேரோடும் உறவுகளோடு ஊரேறி வாழ்ந்தவர் தெருவோடு மரநிழலோடும் பசியோடும் நிதம் சாவோடும் வாழ்கிறார்.... தாய்முலை வறண்டு போனதால் சின்னப்பிஞ்சு பசியால் துடித்துச் சாகுது. பிஞ்சு துடிப்பதை பார்த்து தாய்நெஞ்சு கதறிஅழுகுது மானுடம் காக்கவல்ல 'மருத்துவம்' கூட எம் மக்களுக்கு 'மருந்துக்கும்' கூட இல்லையே...! இருப்பினும்...... எங்கள் இனம்...! எங்கள் சனம்...! 'மானம்' இழக்கவில்லை...!!! 'ஈரம்' இழக்கவில்லை...!!! 'வீரமும்' இழக்கவில்லை...!!! கட்டினால் 'கொண்டை' வெட்டினால் 'மொட்டை' எதுவானாலும் எம்தலையிலாகட்டும் என இறுமாப்போடு வாழும் சனம் எம் சனம். இருந்தாலும்..... எங்கள் சனம் ஏங்கிநிற்பது ஒன்றே ஒன்றுக்குத்தான். புலம்பெயர்ந்து புதுவாழ்வு வாழும் தன்னினம் தனக்காக 'உரிமைக்குரல்' எழுப்பாதா? தனக்காக 'உதவிக்கரம்' நீட்டாதா? இதைதவிர்த்து எதையுமே எப்போதுமே கேட்டதில்லை அவர்கள். குண்டுச்சத்தங்களும் மரணஓலங்களும் தாயகமண்ணில் கேட்கிறது. அங்குதான் கேட்கவேண்டும். எழுச்சியும் விடுதலைகுரல்களும் உதவிக்கரங்களும் இங்கிருந்து செல்லவேண்டும். இங்கிருந்து மட்டும்தான் செல்லவேண்டும். உறவுகள் கருகுதையோ...!!! உலகமே திரும்பிப்பாரடா....!!! அன்புடன் தமிழ்ப்பொடியன் (சபா ரமணா)
This poem was published in "EELAMURAZHU" in australia and also added in tamil radios "inpaththamiloli" , "thamiloosai" , "thamilkural". i wrote this poem for "awareness rally" in melbourne last month.
hi5 glitter words

"வன்னி வளையாது..!!!"


"வடக்கில" ஆயத்தம் "பலமா" நடக்குது.
"கிழக்கில" கெதியா "வெளிக்கப்"போகுது.

என்ன செய்யுறாங்கள் "உவங்கள்" இவ்வவளவு நாளா? எண்டவையும்,
"இரண்டா" உடைஞ்சிட்டினம் எண்டு"இளக்காரம்" பேசினவையும்,
கட்டுநாயக்காவில பறக்கும்புலி "வாணவேடிக்கை"
வரிசையாக காட்ட வாயடைச்சுப்போனவை

கிழக்கிலையும் மன்னாரிலையும் "பூச்சாண்டி" காட்டினவை,
வன்னியுக்கிள்ள வந்தும் "வாலாட்ட" போகினமாம்.
"வீரம்" அங்கதான் "விளைஞ்சு" கிடக்கென்ற விபரம் அறியாமல்,
"வீராப்பு" காட்டுறார் வீணாப்போன "கோதபய".

"எவன்" வந்தாலும் எதிர்த்து நிற்க
ஏரம்பு அப்புவின்ர கையிலயும் "ஏ.கே47"
என்ன "நடக்குது" என்டு எவனுக்கும் விளங்காது.
"எது" வந்தாலும் "மிச்சம்" இருக்காது.

"உரிமைப்போர்" இனி "உச்சக்கட்டம்"
"எச்சில் கூட்டம்" எல்லாம் இனி "தப்பிஓட்டம்".
"மறத்தமிழன்" எல்லோரும் இனி "மக்கள் படை".
"சுய மானம்" ஒன்றுதான் எங்கள் "அடிப்படை".

"உலகத்துக்கு" இப்பதான் "உண்மை" விளங்குது.
"பயங்கரவாதம்" எண்ட பதத்துக்கு "அர்த்தம்" துலங்குது.
கண்காணிப்பு குழு "கண்கள்" திறக்குது.
கவலைப்பட்டு "அறிக்கையும்" விடுகுது.

"விடுதலை" ஒன்றும் "விலைப்பொருள்" இல்லை.
"விரும்பினவன்" எல்லாம் "விலைபேசி" விற்க.
"சுயநிர்ணயம்" தமிழன்ர "சுய கெளரவம்".
"சுந்தர தமிழ்" எங்கள் சுட்டும் "விழிகள்".

தமிழன்ர "தலைவிதி"யை "தறுதலைகள்" தீர்மானிக்க,
"தலைவர்" பார்த்து "சும்மா" இருப்பாரோ?
விடுதலை களத்தினிலே "விதையான வேங்கைகளின்"
நினைவோடு "வேள்வித்தீ" எரித்து "முடிவு" உரைத்திடுவார்.

அன்புடன்
"தமிழ்பொடியன்" தம்பு


"ஆழியவளையின் கருமணிகள்"






click to comment

Interests

தவிப்பு
வணக்கம்!!!
மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "அவுஸ்திரேலியா"
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!
அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புளுதி மண்" வாசம்தான்!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!
ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.
என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!
என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?
ஓலைப்பயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"

என்ன வேன்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!
காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

அன்புடன்
தமிழ்பொடியன்
podiyan@gmail.com

இந்த ஆக்கம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 14.06.2008 வெள்ளிக்கிழமை இரவு ஒலியேறியபோது அன்பர் ஒருவர் தொலைபேசியில் இணைந்து "வாழ வந்த மண்ணையும் மக்களையும் குறை சொல்கிறேன்" என்று ஆதங்கப்பட்டார்.அதற்கான சரியான பதிலை நிகழ்ச்சி தொகுப்பாளர் கானா.பிரபா அண்ணாவும் அடுத்து இணைந்த அன்புச்சகோதரரும் கொடுத்திருந்தனர்.தட்டிகொடுப்பவர்களை விட தட்டிகேட்பவர்களை நேசிப்பவன் நான். இருந்தாலும் என் பதிலும் உணர்வும் இங்கே....!

"வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்.....!!!!
ஐயா..!
காவியம் படைக்க நான் கம்பனும் இல்லை!
மரபுக்கவிதை எழுத எனக்கு "மண்டையும்" இல்லை!
புதுக்கவிதை புனைய நான் "புதுவை அண்ணாவும்" இல்லை!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உனர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!

ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மாசனம்" எமக்கெல்லாம்
எங்ககள் தாயகத்தில் தான்.
அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?
"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"

ஐயா...!
அழுதாலும் விழங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!

அன்புடன்
தமிழ்பொடியன்
15.06.2006
podiyan@gmail.com



அரசியல்,கவிதை,ஒளிப்பதிவு,புகைப்படக்கலை,நடிப்பு,திரைப்பட தயாரிப்பு

Favorite Music


 

Favorite Movies

1.சலங்கை ஒலி-கமல்
2.குணா-கமல்
3.மூன்றாம் பிறை-கமல்
4.சேது-விக்ரம்
5.பிதாமகன் -விக்ரம்
6.தளபதி-ரஜினி அன்ட் மம்முட்டி
7.பருத்திவீரன்
8.தேவதாஸ்- சாருக்கான்
9.சட்லெ சட்லெ -ஸாருக்கான்
10.ரண்-மாதவன்

 

Favorite TV Shows

1.எட்டுக்கு எட்டு-மக்கள்
2.லிட்டில் மாஸ்ரர்-ஜயா
3.சப்தஸ்வரங்கள்-ஜயா
4.கிராண்ட் மாஸ்ரர்-ஜயா
5.பிய பக்டர்- எ.x.என்

 

Favorite Books

1.அக்னி சிறகுகள்-அப்துல் கலாம்
2.அர்த்தமுள்ள இந்து மதம்-கண்ணதாசன்
3.கண்ணதாசன் சுயசரிதை-கண்ணதாசன்
4.எனது மக்களின் விடுதலைக்காக-பிரபாகரன்
5.சத்திய சோதனை-மகாத்மா காந்தி
6.அதிகமாய் ஆசைப்படு-ஜகத்குரு

 

Favorite Quote

 

hi5 Games

Play hi5 Games

ரமணா hasn't played any games recently.

 

Journal

View All 8 Entries    Add Comment

துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்

வேதனையின் விளிம்புகளை,விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....

புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.

இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும்
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்

வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.

விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்
அழுது ஆண்டுகள் ஆச்சு.

விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்
கனவுகள் கண்டவன்
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.

தோல்விகள் என்னை காதலித்ததால்
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.

விடியும் திசையில் தான் என் பயணம்- விரைவில்
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.

வெடிக்கும் கனலாய் கருகுது மனது
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்
இருக்கும் "முடிப்பேன்" எனும் நெருப்பு.



Applications

Browse Applications

myYoutube
Myyoutube is the first ajax written, feature rich, and complete Video application on any social ne...

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

ரமணா has no unwrapped gifts.
 

Friends

View all 369 friends

 
 

Find more friends using the email contact importer.

Comments | View All Entries

Leave a comment for ரமணா

Jun 2 11:33 PM
 
a u single? or multiple?
 
This item has been blocked and cannot be viewed. The user who posted this item has been blocked due to abuse of the hi5 Terms of Service.
 
 
May 10, 2008 11:25 PM
Karan says:
 
mother casts her dreams into the sea;
We, the words sent bobbing towards the sun,
The eggs of stone, the shards of prophesy.
Because she must conclude her melody
And fall back to the sweet dark hush of One,
A mother casts her dreams into the sea,

Hoping to cross that wild infinity
And on some infant shore again to run,
The eggs of stone, the shards of prophesy

Outside the fiery circle of memory,
The howling surf, the incessant years undone …
A mother casts her dreams into the sea

And then dissolves into a tapestry,
Her rolling, helpless drift again begun,
The eggs of stone, the shards of prophesy

Afloat once more upon eternity,
Once more the alien fury, never done …
Again, again, her dreams into the sea,
The eggs of stone, the shards of prophesy!
 
Apr 13, 2008 5:42 AM
Sanji says:
 
புத்தாண்டு வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் இந்த நாட்டில் பங்கெடுக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆலயங்களுக்குச் சென்று நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் வரவேண்டும் என பிரார்த்தியுங்கள்.
வருகிற ஆண்டு சமாதானமும், நம்பிப்கையும் சுபீட்சமும் நிலவ பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
Mar 23, 2008 6:05 AM
 
நண்பா எப்படி சுகம்??
வீட்டில் எல்லோரும்
நலமா < < < < < < < < <??
 
Mar 16, 2008 8:37 AM
Sanji says:
 
**கவலைகளைக் கடந்து கடமைகளை செய்வோம்**

வீர மரணத்துக்கு வீர வணக்கம் செலுத்துவது இயல்பானது. வீரமரணங்களை அர்த்தமுள்ளதாக்க முன்வர வேண்டும். அஞ்சலி செலுத்த கிளர்ந்து எழுவது போல் - கண்டனங்கள் செய்ய கிளர்ந்து எழுவோம்! அதுவே எமது தார்மீகக் கடமை.



MP SIVANESAN FOLLOWS A LIST OF POLITICAL VOICERS OF TAMIL RIGHTS KILLED BY THE GOSL PLZ COME ON 17/03/08 OUTSIDE 10 DOWNING ST (LONDON) FROM 1.30PM-5.30PM TO MAKE YOUR STAND
PLZ FWD 2 U R FRIENDS

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

NANRI VANNAKAM
 
 
Feb 15, 2008 11:30 PM
 
Hi Anna, I like your Profile very much. Do you know me?
 
Feb 12, 2008 11:45 PM
 
காதலர்களே ஒரு நிமிடம்..........

உங்கள் உறவுகள் தாயகத்தில்
தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்
உங்கள் உறவுகளின் உடமைகள்
சூறையாயடப்படுகின்றன.
தமிழ் பெயரை கேட்டாலே
காரணமின்றி கைது செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில்
காதலர் தின கொண்டாட்டங்கள்
தேவைதானா ?
சற்று சிந்தியுங்கள்...........

மண்ணை காதலிப்போம்,
மறவர்கள் சிந்திய
குருதியை காதலிப்போம்
சுதந்திர காற்றை
காதலிப்போம் வாரிர்.......

விடியலின் தூரம் வெகு
தொலைவில் இல்லை.
சுதந்திர தேசத்தில்
காதல் செய்வோம் வாரிர்.......

உங்கள் வரவுக்கய்
காத்திருக்கிறது உங்கள்
தேசம்.............


நம்பிக்கையுடன்.........
V.S.K. குகன்
 
Feb 3, 2008 4:52 AM
 
VANAGAM NALAMA ??? IM SENTHURAN FRIEND KALAI
 
Jan 9, 2008 6:22 AM
Poddu says:
 
தலைவரின் காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்: அதற்கு உங்கட பங்களிப்பு முக்கியம் - இளங்கோவின் இறுதி மடல்
அநுராதபுரம் வான் படைத்தளத்தைத் தாக்கியழித்து தமிழினத்தின் தன்மானத்தை உயரச்செய்து, தாய்நாட்டிற்காகவும், தமிழ் மக்களிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈந்த தற்கொடைக் கரும்புலி மாவீரர்கள் 21 பேரும் தமிழர்களால் இன்று தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் மனதில் நிறுத்தி நினைவில் கொள்ளப்படுகின்றனர்.

இந்த வேளையில் தாக்குதலை வழி நடத்திய தளபதிகளில் ஒருவரான லெப்ரினன்ட் கேணல் இளங்கோ இறுதியா வரைந்த மடல் வெளியிடப்பட்டுள்ளது.



09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.
 
Jan 2, 2008 5:29 AM
 
தமிழர் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் சர்வதேசம் ஏற்க வேண்டும்- உலகத் தமிழர்கள் கிளந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ தேசியத் தலைவர்
 
Dec 14, 2007 1:08 AM
Thiva says:
 
தமிழினம்
பலகாலம் வதைபட்டு
சிங்கள இனவெறியரால்
எமதினம் சிதைபட்டு
திட்டமிட்டு அழிபடும் வேளையிலே
எமதினத்தின் விடுதலைக்காய்
வல்வெட்டித்துறையிலே ஊரிக்காட்டுமண்ணிலே
வீரத்தாய் பெற்றெடுத்த வீரப்புதல்வனே
நீ வாழும் இவ்வுலகில்
நாம் வாழ பெருந்தவம் செய்தோமே

ஈழத்தமிழரின் தேசியத்தலைவரே
உலகத்தமிழரின் அழியா முகவரியே
எமதினத்தின் வரலாற்று பொக்கிசமே

விளையாட்டு வயதிலே
இளமை பருவத்திலே
பொங்கி எழுந்தாயோ
புரட்சி தீயாய்

மட்டக்களப்பிலே தமிழீழமண்ணெங்குமே
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கண்டு
சீறி எழுந்தாயோ சிறுத்தைப் புலியாய்

தமிழினம் வாழும் இடமெங்கும்
விடுதலை விதையை விதைத்து
இன்று பெரு விருசு;சமாய் வளர்ந்து
எம்மை காத்து நிற்கும் மாபெரும் தலைவனே

மாவீரர் திருநாள்
எமதுயிர் தலைவர் பிறந்த மறுநாள்
உலகத்; தமிழினம் காத்திருக்கும் பெருநாள்

வன்னி மண்ணிலிருந்து
விடுதலைப் பேரொலியாய்
எமது தலைவரின் குரலொலிக்கும்
சிங்களப் படை நடுங்கும்
மகிந்தவின் தலைபிசகும்
உலகெங்கும் செய்தியறியும்
தமிழீழமெங்கும் புலிக்கொடி பறக்கும்

வீரத்தாய் பெற்றெடுத்த வீரத்திரு மகனே
வாழ்க தலைவரே வாழ்க பல்லாண்டு
வாழ்க வாழ்கவே
 
Dec 11, 2007 1:03 AM
 
வேண்டாம் நண்பா! இன்றோடு ஒழியட்டும்
வெறுத்து ப்போன வெளியூர் வாழ்வு.

கண காலம் காத்திருந்தோம்
கடத்துபர் கைகளிலே::::::::::::::
களம் இதுதான் என்று சொல்லி
கொண்டு வந்து விட்டு விட்டண்.
கையை கொடுப்போம்
கழுவி கழுவி ஏதோ செய்தபின்
கை அடை யாளம் எடுத்து விட்டம் என்பான்
தலையால் நீ நடந்தாலும்
தப்பி செல்ல முடியாது என்பான்,
'அசூல்' என்று சொல்லி அதிகாரியின் முகம் பார்ப்போம்
அம்மாவை ஆமி சூட்டு கொன்றான் என்போம்
அப்பாவை அவன் ஆம்சால் அடிஷ்சான் என்போம்
அம்முக்குடடியை ஐந்து பேர் சிதைத்ாங்கள் என்போம்
அங்கால போனால் அவங்கள் பிடிக்கிறாங்கள் என்போம்

ஐயகோ நண்பா இனியும் வேண்டாம்,,,,,
அம்மாவை கொலை செய்தும்,
அப்பனை முடம் ஆக்கியும்,
முத்தம் இட்டு உனை வழி அனுப்பி வைத்தவளை -
அன்போடு அநைத்து உனை அண்ணா என்றழைதவாளை -
காடைஜரின் காம ஆட்டதில் கற்பிளந்தவள் ஆக்கியும்
கரிகாலன் படையை பஜாங்கரவதி ஆக்கியும்
கட்டாயம் வேணுமோ நண்பா
கக்கூசு கழுவும் வாழ்க் கை ???????????????

முப்பது நாட்களுக்குள் ஊரை விட்டு போ என்பர்,
முப்பது வஜது வந்தும் முழு மனுசன் ஆகடிருப்பாய்
மூச் சு விட மறந்தேனும் - உந்தனுக்கு
முடிச் சு போட பெண் தேடுவாள் -
முந்நூறு நாள் உனை முழுசாக சுமந்தவள்.
கனடாவில் பெண் என்பர்
கால் கிளப்பி துள்லீஜேழுவாய்
(கண்களிலே காதலி நிற்பாள் )
கண்ணே என்பாய்,என் அன்பே என்பாய்
செல்லம் என்பாய், செல்ல முத்தம் இதுவாய்.
செல்வோமா நாத்டுக்கு ? என்பாய்
ஃபார் வாட்? என்பாள்
அம்மாவை பார்க்க என்பாய்
அம்மாதான் வேணுமோ என்பாள்,
அடுத் த நாளே டீவொஸ் என்பாள்.

அட்டுுலியம் நண்பா
அப்பிடி என்ன அவசியம்
இப்பிடி ஒரு அநியாய வாழ்வு நமக்கு ?

~~~~~~~~~~ அருவி ~~~~~~~~~~
 
 
Nov 13, 2007 2:59 AM
 
நாம் மரணத்துக்குள் வாழ்பவரல்ல,
மரனிதுக்கொண்டே வாழ்பவர்.
மரணத்துக்கே மரண இலக்கணம் கற்பிததவர்
அதனால்த்ானோ நாம் மரணித்த போதும்,
நம் தமிழ் மாண்புடன் வாழ்கிறது.

~~~~~~~~ அருவி ~~~~~~~~~~
 
Nov 11, 2007 3:04 PM
 
தமிழீழம் அமைந்த ஐந்தாவது ஆண்டில் அதனை உலக வல்லரசாக பிரபாகரன் மாற்றிவிடுவார்

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழம் அமைந்த ஐந்தாவது ஆண்டில் அதனை உலக வல்லரசாக பிரபாகரன் மாற்றிவிடுவார் என்று இந்திய அரசாங்கம் அஞ்சுகிறது. நீங்கள் தமிழீழத்தை அங்கீகரித்துப் பாருங்கள். வர்த்தகத் தொடர்புக்கு வந்து பாருங்கள். அவர்கள் செய்து காட்டுவார்கள்
 
 
Oct 19, 2007 10:03 PM
 
Vanakam Thamilmahan.....

Vanankukeran un thamiluku,

Title
body