துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது-வாழ்வு அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம்- சோதனைகள்
வேதனையின் விளிம்புகளை,விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....
புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும் என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும் இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.
இலட்சியங்களை அகலமாக்கியதால் -இன்றும் ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்
வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.
விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர் அழுது ஆண்டுகள் ஆச்சு.