யாழ் மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச முன்பள்ளிகளைச் சார்ந்த சிறார்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு இன்று (13.9.2007) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்ச்சி கிழக்கு கேவில் போக்கறு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு.சி.செபரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இம் மெய்வன்மைத்திறனாய்வுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முதல்வரும், றோமன் கத்தோலிக்கப் பாடசாலை முதல்வரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தேசியக்கொடி, தமிழர் புனர்வாழ்வுக்கழகக் கொடி, முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையக் கொடி என்பன ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சமநேரத்தில் முன்பள்ளிகளின் கொடிகளும் ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீப ஏற்றத்துடன் சிறார்களின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பம்மானது.
வெகு சிறப்பாக அமையப்பெற்றிருந்த சிறார்களின் இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் பெற்றோர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுpறார்களின் விளையாட்டுக்களைத் தொடர்ந்து நிகழ்வில் நடுவாகளாகப் பங்கெடுத்க்கொண்டவர்களுக்கும் பெற்ரோர்களுக்கும் மத்தியிலும் சில போட்டிகள் நடாத்தப்பட்டன.
வெற்றியீட்டிய சிறார்களுக்கும் மற்றும் நடுவர்கள்,பெற்றோர்களுக்கும் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. நேற்று இரவுவரை அறிவிக்கப்பட்ட சுனாமித் தாக்க எச்சரிக்கைகளுக்கும் மத்தியிலும் சிறந்தமுறையிலான ஏற்பாட்டுடன் இடம்பெற்ற சிறார்களின் இன்றைய விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இன்றைய இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரிவுசார்ந்த பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.