சிறீலங்கா கடற்படையின் துருப்புக்காவி ஏ-520 கப்பல் விடுதலைப் புலிளால் மூழ்கடிப்பு சனி, 10 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்]
சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2007ம் விடுதலைப் புலிகளின் கப்பல்களைத் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏ-520 கப்பலே விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தாக்கிய அழிக்கப்பட்டுள்ள துருப்புக்காவிக் கப்பல் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்து இருக்கும் சிறீலங்காப் படையினருக்கு கொண்டு செல்லும் முகமாக வெடி பொருட்களை ஏற்றியிருந்த நிலையில் இக்கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
More Graphics @ CPGrafix.net| Layouts @ CPLayout