நட்பின் முகவரி ------------------ பாலை வனத்து சோலையாய் நாம் சிரித்து மகிழ்ந்த வகுப்பறை நமக்குப் பின் வருவோரின் இருப்பிடமாக மாறுகிறது. அனால் நம் இதயம் அங்கேயே இருப்பு கொண்டதை யாரறிவார் நாளை நாம் பிரியும் நாள் உன்னை பார்த்து சிரிக்க தோன்றும் புன்னகையும் இலையாது. அழத் தோன்றும் ,பேசத் தோன்றும் காற்று மட்டுமே வரும். நாம் பிரியும் நேரத்தில் எங்கேயோ மீண்டும் சந்திபோம் என விடை கொடுக்கிறது ஒரு துளி கண்ணீர் . நம் நட்பின் முகவரியாய்.
உங்கள் உறவுகள் தாயகத்தில் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் உங்கள் உறவுகளின் உடமைகள் சூறையாயடப்படுகின்றன. தமிழ் பெயரை கேட்டாலே காரணமின்றி கைது செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தின கொண்டாட்டங்கள் தேவைதானா ? சற்று சிந்தியுங்கள்...........
மண்ணை காதலிப்போம், மறவர்கள் சிந்திய குருதியை காதலிப்போம் சுதந்திர காற்றை காதலிப்போம் வாரிர்.......
விடியலின் தூரம் வெகு தொலைவில் இல்லை. சுதந்திர தேசத்தில் காதல் செய்வோம் வாரிர்.......
உங்கள் வரவுக்கய் காத்திருக்கிறது உங்கள் தேசம்.............
ஆசை பள்ளி சென்ற பருவ காலம் மீண்டும் இன்று வந்திட ஆசை வெள்ளை உள்ள நண்பருடன் பழகிய காலம் வந்திட ஆசை பிள்ளை என்னைத் தூக்கி அன்னை தாலாட்டுப் பாடிய காலம்வர ஆசை
துள்ளி யவள் மடிமீது ஏறித் தூங்கிய காலம் வந்நிட ஆசை பசுமை யாக வளர்ந்திருக்கும் பயிரை மீண்டும் பார்த்திட ஆசை தந்தை யுடன் வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்ச எந்தன் ஆசை
பாய்ந்து வரும் ஆற்றினிலே நீந்தி விளை யாட ஆசை நதியின் மீது ஓடம் விட்டு நாளும் அழகை ரசிக்க ஆசை பொழுது புலரும் நேரத் திலே கூவும் சேவலைப் பார்திட ஆசை
புழுதி பட எங்கள் மண்ணில் நடந்து வர எந்தன் ஆசை பனித் துளிகள் படர்ந் திருக்கும் புல்லின் மீது நடக்க ஆசை சாரல் மழைத் தூற லிலே நனைந்து வர எந்தன் ஆசை
மெல்ல வீசும் தென்றல் காற்று-என் சுவாசப் பையை நிரப்பிட ஆசை ஆற்று மணல் மீதி னிலே வீடு கட்டி விளையாட ஆசை-அங்கு ஊற் றெடுக்கும் நீர தனைப் பார்த்தி ருக்க நாளும் ஆசை
வயல் வெளியில் நின்று ஆடும் மயிலைப் பார்க்க எந்தன் ஆசை குயிலின் பாடல் கேட்டு நானும் கூவிப் பார்க்க எந்தன் ஆசை கடற் கரையின் சிறு மணலில் மாலை வேளை படுக்க ஆசை
கூடு தேடிப் போகும் பறவைக் கூட்டம் எண்ணிப் பார்க்க ஆசை வெள்ளி நிலா வெளிச்சத் திலே பாட்டி கதை கேட்க ஆசை-அவள் அள்ளித் தரும் சோற்றைத் தினமும் உண்டு ருசிக்க எந்தன் ஆசை
அந்நிய நாட்டில் அனாதை யாக வாழ்ந்திடும் வாழ்க்கை போய்விட ஆசை அன்பு டனே மீண்டும் எனது குடும்பத் துடன் சேர்ந்திட ஆசை ஈழம் கிடைக்கும் வரை அகால மரணம் கூட வராதிருக்க ஆசை தமிழ னுக்கும் இவ்வு லகில் தனிநாடு உண்டென சொல்லிட ஆசை
வணக்கம் ... எனது இனிய இணைய நன்பர்களுக்கு கனிவான ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .. இதுவரை எப்படி இருந்தோமோ ஆனால் இனிவரும் காலங்களில் பிழைகளை களைந்து நற்பண்புகளை மேலும் மெருகூட்டி சிறப்பகா வாழ எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..
இந்த வருடமாவது ஈழத்தமிழராகிய எமக்கு விடிவு காலம் கிடைக்குமா ???... காலத்தின் பதிலுக்காக காத்திருப்போம் அர்ப்பனிப்புடன்..
-KUGAN-